நான் படித்த புத்தகம். ஒரு கண்ணோட்டம்...

Posted by Justin Jeevaprakash | | Posted On Saturday, May 15, 2010 at 7:08 PM

வணக்கம்.  விஞ்ஞான வளர்ச்சியில் பல மாற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வந்தாலும் மனிதனானவன் தனது மெய்ஞான வளர்ச்சியில் தன்னை அறியாமல் பல உலக மாயைகளுக்குச் சிக்கி சீர்குலைந்து கொண்டிருக்கிறான் என்பது பலர் கண்டறிந்த மெய்ஞான உண்மையாகும். ஆகவே, மெய்ஞான வளர்ச்சியைப்பற்றி நான் அவ்வப்போது ஒரு சில நூல்களைப் புரட்டுவதுண்டு. அவ்வகையில் அன்மையில் நான் படித்து முடித்த ஒரு புத்தகம்தான் பெரியவர் அருளானந்த அடியேன் என்பவரால் இயற்றப்பட்ட 'இறைவனை அடையும் சித்தர் அனுபவ விளக்கம்'
எனும் நூலாகும். இந்நூல் மனித வாழ்க்கையின் ஆன்மீக இரகசியங்களை மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றது என்றால் அது மிகையாகாது. இப்புத்தகத்தின் மையம் தன்னை அறிந்து அவற்றுடன் ஒன்றாவதே தன்னை அறியும் பெருநிலையாகும் எனும் இரகசியம்தான். இப்புத்தகத்தை வாசிக்க வாசிக்க எனக்குள் இருந்த பல இருட்டு அறைகள் ஒளிப்பெற்றன. எனது பார்வையில் இப்பெரியவர் இயற்றிய இப்புத்தகம் இந்து தர்ம அடிப்படையில் இருந்தாலும் மதம், இனம் எனும் பேதமில்லாத மனித வாழ்க்கையின் இரகசியங்களை படம் பிடித்துக்காட்டுகின்ற ஒரு பொக்கிஷம் என்றே கூறத்தோண்றுகிறது. (இப்புத்தகத்தைப் படித்து பயன் பெற விரும்புவோர் (http://www.sageagatthiyar.com/) எனும் இணயத்தளத்தை நாடிப் பெற்றுக்கொள்ளலாம். நன்றி

Comments:

There are 3 comments for நான் படித்த புத்தகம். ஒரு கண்ணோட்டம்...

Post a Comment