தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்...!

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, June 27, 2010 at 9:37 AM

வணக்கம்.  இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
http://www.un.org/news/ossg/hilites.htm
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம். ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்-களை
தெரியபடுத்தவும்.


Marzuki Darusman
Former Indonesian attorney general
Director of Governance and Legal Reform
Association of Southeast Asian Nations (ASEAN)
A long serving veteran in the political arena and former Indonesian
Attorney General, Mr. Darusman has in-depth knowledge and practical experience in Indonesia’s legal and regulatory sytems. His determined work to build up the credibility of the National Human Rights
Commission in the early days of its establishment earned him a well-deserved reputation as a human rights advocate. He is currently one of the Chairpersons of the GOLKAR Party.

Marzuki Darusman
Strategic Asia Indonesia
Plaza Bumidaya 28th floor,
Jl. Imam Bonjol No. 61, Jakarta 10310
Tel. +62 21 3151797
Fax. +62 21 3155712
contact.us@strategic-asia.com
info@aseanhrmech.org
http://strategic-asia.com/marzuki-darusman.html



Steven Ratner
An international law of war expert, A US international law expert Professor, International Institute, University of Michigan Steven R. Ratner, the Bruno Simma Collegiate Professor of Law, came to the University of Michigan Law School in 2004 from the University of Texas School of Law. His teaching and research focuses on public international law and on a range of challenges facing governments and international institutions since the Cold War, including ethnic conflict, border disputes, counter-terrorism strategies, corporate and state duties regarding foreign investment, and accountability for human rights violations. Professor Ratner has written and lectured extensively on the law of war, and is also interested in the intersection of international law and moral philosophy and other theoretical issues. In 1998-99, he was appointed by the UN Secretary- General to a three-person group of experts to consider options for bringing the Khmer Rouge to justice, and he has since advised governments, NGOs, and international organizations on a range of international law issues. In 2008-09, he served in the legal division of the International Committee of the Red Cross in Geneva. A member of the board of editors of the American Journal of International Law from 1998-2008, he began his legal career as an attorney-adviser in the Office of the Legal Adviser of the U.S. State Department. Professor Ratner holds a J.D. from Yale, an M.A. (diplôme) from the Institut Universitaire de Hautes Etudes Internationales (Geneva), and an A.B. from Princeton. He established and directs the Law School’s externship program in Geneva.

Bruno Simma Collegiate Professor of Law
433 Hutchins Hall
Tel :734.647.4985
Fax : 734.763.9375
E-mail: sratner@umich.edu
http://web.law.umich.edu/_FacultyBioPage/facultybiopagenew.asp?ID=300



Ms. Yasmin Louise Sooka
South African Human Rights Lawyer
Executive Director - Foundation for Human Rights
Former Deputy Chairman, The Truth and Reconciliation Commission (TRC) Yasmin Louise Sooka is the executive director of the Foundation for Human Rights. Before joining the foundation, she served as a commissioner on the South African Truth and Reconciliation Commission as the deputy chairperson to the Human Rights Violations Committee. In 2004 she was appointed by the United Nations high commissioner for human rights to serve as international commissioner on the Sierra Leone Truth and Reconciliation Commission. She is considered an expert on both transitional justice and gender. She regularly consults internationally to governments, international agencies, commissions and civil society organisations on transitional justice and peace building. Sooka also serves as an executive member to the Niwano Peace Foundation and is a trustee of the Centre for Conflict Resolution and the Black Sash Trust. She currently chairs the steering committee for South Africa’s Action Plan to address racism, racial intolerance, xenophobia and other related intolerance.

Ms. Yasmin Louise Sooka
Director, Foundation for Human Rights, Johannesburg
Private Bag X14
Arcadia 0007
South Africa
+27 12 440 1691
+27 12 440 1692
YSooka@fhr.org.za
info@fhr.org.za
webmaster@justice.gov.za
info@ijr.org.za
trc.comments@pop.onwe.co.za
prodder@sangonet.org.za
http://www.fhr.org.za/page.php?p_id=16


நன்றி :

முத்தமிழ்வேந்தன்
சென்னை

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து 4,000 தமிழ் அறிஞர்கள்

Posted by Justin Jeevaprakash | | Posted On Tuesday, June 22, 2010 at 6:22 PM


        வணக்கம். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக, 50 நாடுகளில் இருந்து 4 ஆயிரம் தமிழ் அறிஞர்கள் கோவை வருகிறார்கள். மாநாட்டு ஆய்வரங்க வளாகத்தை, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, 23-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. மாநாடு தொடங்க இன்னும் 2 நாட்களே இருப்பதால் கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
செம்மொழி மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நடக்கும் கொடிசியா வளாகத்தில், அதிநவீன உள்அரங்கம், பிரமாண்ட விழா பந்தல், மேடை, கண்காட்சி அரங்கம், பழங்கால அரிய பொருட்கள் இடம்பெறும் கண்காட்சி அரங்கம், 21 ஆய்வரங்குகள், உணவுக்கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
         அரண்மனை கோட்டை வடிவிலான பிரமாண்ட மாநாட்டு பந்தலின் முகப்பு, கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தல் மற்றும் அரங்கங்களை சாரைசாரையாக பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்த இடமே சுற்றுலாத்தலம் போல காட்சி அளிக்கிறது. 23-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். அன்று மாலை பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் `இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்கின்றன.
            பேரணியை முக்கிய பிரமுகர்கள் பார்வையிட அவினாசி ரோடு ஹோப் கல்லூரி முதல் ரங்கவிலாஸ் மில் வரை 11/2 கிலோமீட்டர் தூரம் நீண்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பார்வையிடுவதற்காக சி.ஐ.டி. கல்லூரி அருகே குண்டு துளைக்காத தனிமேடை அமைக்கப்பட்டு உள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், 50 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்கிறார்கள். மொத்தம் 1,020 தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
            பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அஸ்கோபர் போலா, இலங்கையைச் சேர்ந்த சிவதம்பி ஆகியோர் கோவை வந்துள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த மற்ற தமிழ் அறிஞர்கள் கோவை வந்த வண்ணம் உள்ளனர். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு கோவை வந்து மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தார். நேற்று காலை கோவை வ.உ.சி. மைதானத்தில் தயாராகும் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார். பின்னர் அவர் திருச்சி ரோட்டில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டபின் கொடிசியா வளாகத்துக்கு சென்றார்.
           21 குளு, குளு ஆய்வரங்குகளையும், புதுப்பிக்கப்பட்ட கொடிசியா வளாகத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அவருடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, சுரேஷ்ராஜன், தமிழரசி, பூங்கோதை, சாமிநாதன், தனிஅலுவலர் அலாவுதீன், கலெக்டர் உமாநாத், செய்தித்துறை செயலாளர் முத்துசாமி, மாநகராட்சி ஆணையாளர் அன்சுல்மிஸ்ரா, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாநாட்டையொட்டி கோவையில் சிறைச்சாலை மைதானம், காந்தி பூங்கா, வடவள்ளி மருதமலை ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி உள்பட 11 இடங்களில் செம்மொழி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தமிழர் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையில், 22-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
            நேற்று மாலை காந்திபுரம் சிறை வளாகத்தில் நடந்த செம்மொழி கலைவிழாவை துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த கலைநிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கிறார்கள்.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு `இந்தியன் ஏர்லைன்ஸ்’ விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
          வரவேற்பு முடிந்ததும் அவர் கொடிசியா அரங்கிற்கு சென்று மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்டார். முதல்-அமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார்.  மாநாட்டை தொடங்கிவைப்பதற்காக, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 22-ந் தேதி மாலை கோவை வருகிறார். ஜனாதிபதி, முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதிகள், அரசு விருந்தினர் விடுதிகள் மற்றும் தமிழ் அறிஞர்கள் தங்கும் விடுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் போலீசார் மற்றும் ஆயிரம் ஊர்காவல் படையினர் ஈடுபடுகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு பணியை தொடங்கி விட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநாட்டையொட்டி சிறப்பு பஸ்-ரெயில்கள், கூடுதல் விமானங்கள் விடப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
            மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட சாலைகள், பூங்காக்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என கோவை நகரமே ஜொலிக்கிறது. பேரணி நடைபெறும் அவினாசி சாலையிலும், மற்றும் முக்கிய சாலைகளிலும் தமிழ் இலக்கிய காட்சிகள், தமிழர்களின் வீரம், பண்பாடு ஆகியவற்றை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
            மாநாட்டுக்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்காக போதிய குடிநீர் மற்றும் உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 4 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 415 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.
நன்றி :

அலைகள் செய்தி தளம்

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி

Posted by Justin Jeevaprakash | | Posted On Saturday, June 12, 2010 at 2:08 AM

வணக்கம். சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி
சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது. இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி
சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும்,
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நடப்பு விவகாரங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அதில் அவர் முக்கியமாகத்
தெரிவித்துள்ளவை வருமாறு, இலங்கைத் தூதரகங்கள் அரசியல் மயப்பட்டுவிட்டன. அவை புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தமிழர்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. இலங்கைத் தூதரகங்கள் அமைந்திருக்கும்
அந்தந்த நாடுகளின் இணக்கத்துடன் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது நிலைமை மாறுகிறது. ஏனெனில் அந்நாடுகள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டன.
ஐ.நாவின் சர்வதேச குற்ற விசாரணைகளுக்கு இடம்கொடுக்காமல் இருப்பதன் மூலம் இலங்கையின் பெயர் கெடுகிறது. இலங்கையே அதன் பெயரை கெடுக்கிறது. இலங்கையின் யுத்தக் குற்றங்கள் உள்நாட்டு விடயங்கள் அல்ல.யுத்தக் கைதிகளை படுகொலை செய்தல். அப்பாவி பொதுமக்களை கொலைசெய்தல், பெண்களை கற்பழித்தல் என்பன எப்படி உள்நாட்டு விடயங்கள் ஆகி விடமுடியும். இலங்கைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் கிடைக்கப்பெற்றது உண்மையான வெற்றி
அல்ல. ஏனெனில் சிவில் யுத்தத்தின் மூலப் பிரச் சினைகண்டறிந்து
தீர்க்கப்படவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுடன் அர்ப்பணிப்பு, பற்றுறுதி,
விசுவாசம், நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில்
பேச்சுக்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால் அரசுத் தரப்பில் இவை ஒன்றையும் காண முடியாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:

தந்தை பெரியார் மடற்குழு.

கூலிம் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற 'கலைத்திறன் போட்டி'

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, June 10, 2010 at 5:01 PM

            வணக்கம். கடந்த ஜூன் 6 ஆம் தேதி, கூலிம் பண்டார் பாருவின் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட ரீதியில் கலைத்திறன் போட்டி சிறப்பாக நடைபெற்றது.இதில் மாவட்டதிதின் கீழ்  அமைந்துள்ள   17         தமிழ்ப்பள்ளிகளும்       பங்கெடுத்தன.                  மாணவர்கள்  பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி,  கவிதை புனையும் போட்டி,  கதைச் சொல்லும் போட்டி, கணினிப் போட்டி, நாட்டியப் போட்டி எனும்  பல  நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு  கூலிம்  தமிழ்ப்பள்ளியில்           காலை 9.00 மணியளவில்  ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போட்டியை மாநில கல்வி  இலாக்காவின்  மொழிப்பிரிவு துணை இயக்குனர்  திரு. தமிழ்ச் செல்வன்  அவர்கள்  துவக்கி  வைத்து       உரையாற்றினார்.  மாணவர்களின்   கலைத்         தன்மையை     மேலோங்கச்                   செய்வதற்கு       
இவ்விழா ஒரு நல்ல சந்தர்ப்பமாகச் அமந்தது என்றே கூற வேண்டும். மாணவர்கள்  ஆர்வமுடன் தங்களின்
திறமைகளை         வெளிப்படுத்தினர். 
அனைத்து நிகழ்வுகளும்         சரியாக 
மதியம் 2.00    மணியளவில்             முடிவுற்றது. இந்நிகழ்வை முடித்து வைக்க கெடா 
மாநில                   தமிழ்ப்பள்ளிகளின்    
அமைப்பாளர்திரு.இராமகிருஷ்னண்
அவர்கள் வருகைப்புரிந்திருந்தார்.
கணேசர் தமிழ்ப்பள்ளியில் முதன்  முறையாக  அதிகமான பரிசு கோப்பைகளை            மாணவர்கள்                தட்டிச்   சென்றது,   அனைத்துத் தரப்பினருக்கும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இடம்: திரு.தேவராஜன் நடு: திரு.இராமகிருஷ்ணன் வலம்: நான்
பரிசுப்பெற்ற கணேசர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

மாணவர்களிடம் இருக்கின்ற கலைத்திறனை இம்மாதிரியான போட்டிகளில் மட்டுமே வெளிப்படுத்த  முடிகிறது.  ஆகவே, ஆசிரியர்களும்  பெற்றோர்களும்    குழந்தைகளிடம் மறைந்திருக்கின்ற      கலைத்தன்மையை
 வெளிபடுத்த தயாராகஇருத்தல் வேண்டும். ஒவ்வொரு   குழந்தைகளுக்கும்   ஒவ்வொரு வகையிலான  கலைத்தன்மை மறைந்திருக்கிறது. அதுவே அவர்களின் ஆற்றலுக்கான விதை. அதை அவர்களிடமிருந்து வெளிக்கொணர்ந்தால் அவர்கள் உள ரீதியிலும் உடல் ரீதியிலும் வலிமைப் பெற்றவர்களாகத் திகழ்வர். அது மட்டுமின்றி  அழிந்து  கொண்டு  வருகிற நம் கலை, பண்பாடு, கலாச்சாரத்தையும் வளுப்படுத்துவதற்கு இம்மாதிரியான நிகழ்வுகளே முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே நாம் நமது கலை, பண்பாடு, கலாச்சரத்தை அழித்தது போதும்! இனிமேலாவது நம் எதிர்கால சங்கதியினரிடம் அதனை வாழ வைப்போம்....! நன்றி.


Blood on Water”- என்.டி.டி.வி.யின் ஆவணப்படத்தில் கூறப்படுவது என்ன?

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, June 3, 2010 at 3:34 PM

‘நாங்கள் இலங்கையில் இருக்க முடியாதவாறு சிறிலங்காப் படையினர் எம்மைத் துன்புறுத்துகின்றனர். எங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். எங்களின் சகோதரர்களை, எங்களின் மக்களை சிறிலங்காப் படையினர் சித்திரவதை செய்கின்றனர். அவர்களைக் கொல்கின்றனர். இதனால் அங்கிருக்க முடியாமல் அவுஸ்ரேலியா செல்வதற்காக நாங்கள் புறப்பட்டோம்.’

இந்த உரையாடல் “Blood on Water” எனும் தலைப்பில் இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.வி ஒளிபரப்பிய விவரண ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விவரணச் சித்திரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால் இந்த ஆவணபடத்தை வாபஸ் பெறுமாறு இந்தியாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் காரியவசம் குறித்த தொலைக்காட்சி சேவைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.



தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் அங்கு இயல்பாக வாழ்வதற்கான எவ்வித அமைதியான சூழ்நிலையும் உருவாகவில்லை என்பதையும், தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிடவே விரும்புகிறார்கள் என்பதையும் அது வெளிப்படுத்துகின்றது.

இதேபோன்றே, தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வருகின்றார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அது வெளிப்படுத்தியது. சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க முடியாததாலேயே தாங்கள் இங்கே வந்ததாக இலங்கைத் தமிழ் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கையில் கடந்த வருடம் போர் ஓய்வடைந்ததற்குப் பின்னரும் தமிழ் மக்கள் அங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுவதையே இத்தகைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.


வவுனியா தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு எந்தவொரு அனைத்துலக ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தகைய தடுப்பு முகாம்களில் இருந்து மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. இவ்வாறு மீளக் குடியேற்றப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விலும் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்து விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கான சுதந்திரத்தை வழங்குவேன் என்று குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அம் மக்களுக்கு என்ன சுதந்திரத்தை வழங்கினீர்கள் எனக் கேட்கவும் எவருமில்லை.

போர் முடிவடைந்து விட்டது என்பது சமாதானம் உருவாகி விட்டது என்று அர்த்தப்படாது என ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பேராசிரியர் அனுருத்த செனோய் தெரிவிக்கின்றார்.

மீண்டும் ஓர் போர் உருவாகாத வகையில் சமாதானமும் தேசிய நல்லிணக்கமும் உண்மையான அர்த்தத்துடன மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா சிறிலங்காவுக்கு ஏற்படுத்திய அழுத்தங்கள் போதுமானதாக இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையைச் சிங்கள நாடாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதைத் தான் செய்து வருகின்றார். மாறாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தாலும் அதனைத்தான் செய்திருப்பார். எங்களைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஒரே மாதிரித்தான். தமிழ் மக்களைப் பொறுத்த வரை அழிவு அழிவு தான் என தமிழ் இளைஞர் ஒருவர் கூறுகின்றார்.

போர் முடிவடையும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டினார்கள். ஆனால் போர் முடிவடைந்த பிறகும் எங்களை சிறிலங்காப் படையினர் மீன்பிடிக்க அனுமதிக்கவில்லை.

சிறிலங்காப் படையினர் கடலில் எங்களைக் கண்டதும் சுட்டுத் தள்ளுவதாக தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் குறிப்பிடுகின்றார். இதுவரை 300 தமிழக மீனவர்கள் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், 500 தமிழக மீனவர்கள் காயப்பட்டுள்ளார்கள்’ என்று என்.டி.டி.வி.யின் ஆவணப்படத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி.

வள்ளுவம்.