இனியும் எங்களை எரிக்காதீர்.......

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, July 4, 2010 at 8:24 PM


விடிய மறந்தானோ ஆதவன்…..


திசை மறந்தானோ ஆண்டவன்…..?

கருகிய தமிழனின் தேகம் கண்டு

கருக மறந்ததோ மேகக்கூண்டு….?

மழையே பொழிந்திடு

எம்மண்ணில் தீயின் தாகத்தை தீர்த்திடு…..!

எம் மக்களின் வற்றாத குலக்கண்கள்...

தினந்தோறும்…

ஒரு தேசத்தின் துயர்துடைத்து

துயர் வாங்கும் கொடுமைகளை

பண்டமாற்றமாய் ஆக்கியதே.....!

அராஜ அசுர அரசியலே…

குண்டு மழை குளியளில்

தமிழனின் நிறத்தை உரசிப்பார்க்காதீர்…!

கருகினாலும் நாங்கள் நாங்களே….

எங்கள் உடன் பிற்ப்புக்களின்

இரத்த வெள்ளக் குளியலில்

நீச்சல் போட்டி ஆடுகிறார்களே

உலகத்தலைவர்கள்…..!
-தமிழினியன்

Comments:

There are 2 comments for இனியும் எங்களை எரிக்காதீர்.......

Post a Comment