கணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..

Posted by Justin Jeevaprakash | | Posted On Tuesday, May 18, 2010 at 4:32 PM

வணக்கம். ஆசிரியர் தினக்கொண்டாட்டம் கணேசர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள்  மிகவும் மகிழ்ச்சியுடன் அந்நாளைக் கொண்டாடினர். ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூர்ந்து மாணவர்கள் சிலர் சுயமாக கவிதை இயற்றி ஒப்புவித்தது ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்தது. அதுமட்டுமின்றி  அனைத்து  
மாணவர்களும் வகுப்புவாரியாக
ஆசிரியர்களுக்கென விருந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்களுக்குத் தங்களின்  அன்பை வெளிப்படுத்தினர். மேலும்,
மாணவர்கள் உற்சாகத்துடன்         புதிர் போட்டிகளிலும் விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு மகிழ்வுற்றனர். இந்த ஆசிரியர் தினத்தில் மாணவர்கள்    மட்டுமின்றி அனைவருமே தங்களின் ஆசிரியர்களை       நினைவுக்கூர்வர்; ஒரு வினாடியாவது தனக்குப் போதித்த
ஆசிரியரின் சேவையை நினைத்து ஆனந்தம் அடைவர். இதுவே,
இறைவன் ஆசிரியர்களுக்குக் கொடுத்த ஒரு வரம் என்றே நான் கருதுகிறேன். நன்றி.

Comments:

There are 0 comments for கணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..

Post a Comment