கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 2 (03.10.2011)

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 9, 2011 at 9:22 PM

         கோ.சாரங்கபாணியின் இரண்டாவது நாளான இன்று மாணவர்கள் கதைக்கூறும் போட்டியிலும் புதிர்போட்டியிலும் கலந்து கொண்டனர். ஓவ்வொரு ஆண்டிலும் மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர் துணையுடனும் கதைகளை உருவாக்கிக் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கதைகளை முன் வைக்க வந்தாலும், பயத்தின் காரணமாக, குரல் நடுக்கத்துடன் கதைகளை ஒப்புவித்தது, பாராட்டக்கூடிய விடயம் என்றே கருதுகிறேன். இத்தகைய          பயம் மாணவர்களிடம் நாம் வளர்த்துவிட்டோமானால்         அது மாணவர்களிடம் பேச்சாற்றலை வளர்த்து 
விடாமல், அவர்களை தாழ்வுமனப்பான்மைக்குத் தள்ளிவிடுவதோடு, ஒரு சபைக்கு முன்னால் பேசும் ஆற்றலை இழந்தும் விடுவர் என்பது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

கதைக்கூறும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில மாணவர்கள்...


           கதைக்கூறும் போட்டிக்குப் பிறகு, மாணவர்களுக்குப் பதிர் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தமிழ், தமிழினம் தமிழர் பண்பாடு சம்மந்தமான கேள்விகள் அடங்கிய பதிர் போட்டியாக இது அமைந்தது. மாணவர்கள் தமிழ் அறிஞர்களையும் அவர்களின் போராட்டங்களையும் முன்பே அறிந்திருந்தது இப்புதிர்போட்டியில்  கலந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்ததை அவர்களின் பங்கெடுப்பின் மூலம் அறிந்து கொண்டேன்
     மேலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளையும், தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தது மட்டுமல்லாமல், தமிழ் பால் ஆர்வம் அடைந்து என்னையும் என் சக ஆசிரியர்களையும் மகிழ்வித்தது
என்றே கூறவேண்டும்.   இதன் வழி  என்னுடைய நோக்கம் நிறைவேறிற்று என்பதை என்னால் உணர முடிந்தது.இந்த இரு நிகழ்வுகளுடன் இன்றைய இரண்டாம் நாள் ஒரு நிறைவை எட்டியது.

தொடரும்.....
  

கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 2, 2011 at 7:10 PM

         வணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி  மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது.  தற்போது      நம் மாணாக்கர்களிடம்       தமிழுணர்வு  நாளுக்கு நாள்      குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன  செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம்  முழுதும்  தமிழர்,    தமிழரின்     பண்பாடு,கலாச்சாரம்       போன்றவற்றை   யொட்டிய    நிகழ்வுகள்  அடக்கிய  ஒன்றை   நடத்திப்பார்க்கலாமே         என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து,  தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.
        நிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
          முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். மாணவர்கள்,  மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர்  என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.      அதுமட்டுமின்றி,  ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின்                           கவிதை                ஒப்புதல்கள்     புலப்படுத்தியது.
            இப்போட்டியினைத்             தொடர்ந்து,
ஐந்தாம் மற்றும் ஆறாம்         ஆண்டு
மாணவர்களுக்கென கபடிப் போட்டி
நடைபெற்றது.  
இவ்விளையாட்டினை  மாணவர்கள்
ஏற்கனவே     விளையாடியிருந்தாலும், இது  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும்  ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில்  வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும்  என்பது இங்கு  குறிப்பிடத்தக்கதாகும்.

தொடரும்......
       

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ' பாகேஸ்' (BAGES) செயல்திட்டம்.

Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, June 10, 2011 at 11:06 PM

     வணக்கம். கணேசர் தமிழ்ப்பள்ளியில்          முதலாம் ஆண்டு மாணவர்களுக்கென தேசிய மொழியில் எளிதில்  வாசிக்க இந்த 'பாகேஸ்'  எனும்  செயல் திட்டத்தை  
இவ்வாண்டின் ஆரம்பத்தில் துவங்கினேன். இதில் மாணவர்களுக்கு 6 நிலையிலான வாசிப்புப் புத்தகங்கள்(எளிமையிலிருந்து  கடினம்)   6  நிலையங்களாக  பிரித்து  வகுப்பறையைச் சுற்றி வைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் நிலையறிந்து தங்களுடைய நிலையங்களை வளம் வரும்படி ஓர் அமைப்பு முறையை உருவாக்கியதன் மூலம், அவர்கள்  எளிதில்  தங்களுக்கான  வாசிப்புப் புத்தகங்களை அடையாளங்கண்டு  வாசிக்கப் பழகினர்.
இது மாணவர்களின் வாசிப்புத்திறனை மேலோங்க செய்ததோடு, சுயக்கற்றலையும் உருவாக்கியதை எங்களால் உணர முடிந்தது. வாரத்தில் ஒரு நாள் இச்செயல்திட்டத்திற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளும்   மாணவர்களின் அடைவுநிலையின்படி,   அடுத்த நிலையங்களுக்கு அவர்களை உயர்த்துவதற்கும் பிரத்தியோக வகுப்பொன்றும்                     சிறப்பாக  
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்டும் வருகிறது. இதில் இக்குழந்தைகள் மிகவும் ஆர்வத்தோடு இயங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் மாணவர்கள் இதச்செயல்திட்டத்தில்   மொழிவிளையாட்டுகளில் ஈடுபடுவதைப் போலவே  
ஆர்வம் குன்றாமல்   இன்றளவிலும்  ஈடுபாடு  காட்டி  வருவதும்,  தேசிய மொழியில் கடந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை விட இவர்கள் சீக்கிரமே வாசிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதையும் எங்களால் இச்செயல் திட்டத்தின் மூலம் உணர முடிகிறது.
          தேசிய மொழியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எழுத்தறிமுகம் செய்யவும், அல்லது வாசிப்புத் திறனை மேலோங்கச் செய்யவும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை எளிமைபடுத்திக் கொள்ளவும் இத்திட்டம் எங்களுக்கு நன்கு உதவியது என்றே கூற வேண்டும்.இத்திட்டத்தை ஆசிரியர்கள் தங்களின் பள்ளியிலும் நடத்திப் பார்க்க விரும்பினால் என் மின் அஞ்சலுக்குத் தாராளமாகத்  தொடர்புக்கொள்ளலாம். நன்றி.