கணேசர் தமிழ்ப்பள்ளில் 'புதிய பாதை' எனும் புதிய வடிவிலான யூபிஎசார் பயிற்சி நூல்...
Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, July 30, 2010 at 1:39 AM
வணக்கம். கடந்த மாதம் சூன் 26 ல் பள்ளிக்கூட ரீதியில் 'புதிய பாதை' எனும் தமிழ் மொழி தாள் இரண்டிற்கான பயிற்சி புத்தகம் ஒன்றை வெளியீடு செய்தேன். இப்புத்தகம் மாணவர்களின் புரிதலுக்கு ஏற்பவும் அவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியரின் துணையின்றி தாமாகவே இயங்க முடியும் என்ற உணர்வைத் தூண்டக்கூடிய வண்ணம் இருக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இப்புதிய பாதையை வடிவமைத்தேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiROpDoeMtkBMm0t6ABp1vt8ERbAWTijdJq6g85fLGHwkOiF0Hb2LobqHRnik7-lnz10TdW2q-nIH2cAfmSpFWAhX5k-hG86GsUEeIK82PzkxL1qzJLp69U5y3m7gfgJe8DK7NcYJ_HcaM/s320/230520101640.jpg)
இத்தகைய பயன்பாடு மாணவர்களுக்குக் கருத்துக்களைத் திரட்டி கொடுப்பதோடு, மனக்காட்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை எனது ஆய்வின் மூலம் என்னால் கண்டுணர முடிந்தது. இதுவே இப்புதிய பாதைக்கு வித்திட்டது என்றே கூற வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWFiqo67Vae_6G2W4vL_pyiIDungBJrUdvGPvXI4dk7NRyfgCS9226v7ZyUV5l9N7hRjQLeKDKTtZW9NHFHTuNqPHyRjYb-tYKnznIk06C7ScAIM1KsQ-Ow70z9wqTr8VJAyaw1LrXgE8/s320/230520101646.jpg)
நன்றி.
.