தமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, May 31, 2012 at 10:30 AM

      தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, மாணவர்கள் தங்களை அதிகமாகவே ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.இன்றைய தினத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பட்டிமன்றம் நடத்தினேன். இப்பட்டிமண்றத்தை ஆசிரியை திருமதி அல்லியும் ஆசிரியை திருமதி சரோஜா தேவியும்எனக்கு சிறப்பாக      நடத்திக் 
கொடுத்தனர். இதில் நாங்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, மற்றும் ஆறாம் ஆண்டு  மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் முப்பிரிவுகளாகப் வகுப்பிற் கேற்றவாறு பிரிக்கப்பட்டனர்.     இப்போட்டிகளில் மாணவர்கள் தலைப்பிற்கேற்ப கருத்துகளை திரட்டி வந்து பேசியது மிகவும் சுவாரிசியமாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாணவர்கள்  கோலமிடும் போட்டியிலும் கலந்து கொண்டனர்.
               இப்போட்டியில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.  நம் இனத்தின் பாரம்பரியயத்தில் ஒன்றான கோலமிடுதல், நம் இனத்தரிடம் குறைந்தே வருவது, நம் பாரம்பரியத்தின் அழிவை நோக்கிவிடுமமென்ற அச்சத்தில் இதையும் ஒரு போட்டியாக நிகழ்த்த வேண்டும் என்ற எனது தீர்மானத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உடன்பட்டனர். ஐந்து பேர் ஒரு குழுவாக ஒன்றாம் ஆண்டு வரை ஆறாமாண்டு வரையில் மாணவர்களுக்கு இடங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டது.  மாணவர்கள் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த கோலங்களை குழுமுறையில் வரைந்து காட்டினர். அனுபவமே இல்லாத பல மாணவர்கள் முதல் முறையாகக் கோலம் வரைந்தாலும் மிகவும் அழகாகவே வரைந்தனர்.

கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 2 (03.10.2011)

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 9, 2011 at 9:22 PM

         கோ.சாரங்கபாணியின் இரண்டாவது நாளான இன்று மாணவர்கள் கதைக்கூறும் போட்டியிலும் புதிர்போட்டியிலும் கலந்து கொண்டனர். ஓவ்வொரு ஆண்டிலும் மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர் துணையுடனும் கதைகளை உருவாக்கிக் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கதைகளை முன் வைக்க வந்தாலும், பயத்தின் காரணமாக, குரல் நடுக்கத்துடன் கதைகளை ஒப்புவித்தது, பாராட்டக்கூடிய விடயம் என்றே கருதுகிறேன். இத்தகைய          பயம் மாணவர்களிடம் நாம் வளர்த்துவிட்டோமானால்         அது மாணவர்களிடம் பேச்சாற்றலை வளர்த்து 
விடாமல், அவர்களை தாழ்வுமனப்பான்மைக்குத் தள்ளிவிடுவதோடு, ஒரு சபைக்கு முன்னால் பேசும் ஆற்றலை இழந்தும் விடுவர் என்பது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

கதைக்கூறும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில மாணவர்கள்...


           கதைக்கூறும் போட்டிக்குப் பிறகு, மாணவர்களுக்குப் பதிர் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தமிழ், தமிழினம் தமிழர் பண்பாடு சம்மந்தமான கேள்விகள் அடங்கிய பதிர் போட்டியாக இது அமைந்தது. மாணவர்கள் தமிழ் அறிஞர்களையும் அவர்களின் போராட்டங்களையும் முன்பே அறிந்திருந்தது இப்புதிர்போட்டியில்  கலந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்ததை அவர்களின் பங்கெடுப்பின் மூலம் அறிந்து கொண்டேன்
     மேலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளையும், தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தது மட்டுமல்லாமல், தமிழ் பால் ஆர்வம் அடைந்து என்னையும் என் சக ஆசிரியர்களையும் மகிழ்வித்தது
என்றே கூறவேண்டும்.   இதன் வழி  என்னுடைய நோக்கம் நிறைவேறிற்று என்பதை என்னால் உணர முடிந்தது.இந்த இரு நிகழ்வுகளுடன் இன்றைய இரண்டாம் நாள் ஒரு நிறைவை எட்டியது.

தொடரும்.....
  

கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 2, 2011 at 7:10 PM

         வணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி  மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது.  தற்போது      நம் மாணாக்கர்களிடம்       தமிழுணர்வு  நாளுக்கு நாள்      குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன  செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம்  முழுதும்  தமிழர்,    தமிழரின்     பண்பாடு,கலாச்சாரம்       போன்றவற்றை   யொட்டிய    நிகழ்வுகள்  அடக்கிய  ஒன்றை   நடத்திப்பார்க்கலாமே         என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து,  தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.
        நிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
          முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். மாணவர்கள்,  மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர்  என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.      அதுமட்டுமின்றி,  ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின்                           கவிதை                ஒப்புதல்கள்     புலப்படுத்தியது.
            இப்போட்டியினைத்             தொடர்ந்து,
ஐந்தாம் மற்றும் ஆறாம்         ஆண்டு
மாணவர்களுக்கென கபடிப் போட்டி
நடைபெற்றது.  
இவ்விளையாட்டினை  மாணவர்கள்
ஏற்கனவே     விளையாடியிருந்தாலும், இது  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும்  ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில்  வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும்  என்பது இங்கு  குறிப்பிடத்தக்கதாகும்.

தொடரும்......
       

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ' பாகேஸ்' (BAGES) செயல்திட்டம்.

Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, June 10, 2011 at 11:06 PM

     வணக்கம். கணேசர் தமிழ்ப்பள்ளியில்          முதலாம் ஆண்டு மாணவர்களுக்கென தேசிய மொழியில் எளிதில்  வாசிக்க இந்த 'பாகேஸ்'  எனும்  செயல் திட்டத்தை  
இவ்வாண்டின் ஆரம்பத்தில் துவங்கினேன். இதில் மாணவர்களுக்கு 6 நிலையிலான வாசிப்புப் புத்தகங்கள்(எளிமையிலிருந்து  கடினம்)   6  நிலையங்களாக  பிரித்து  வகுப்பறையைச் சுற்றி வைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் நிலையறிந்து தங்களுடைய நிலையங்களை வளம் வரும்படி ஓர் அமைப்பு முறையை உருவாக்கியதன் மூலம், அவர்கள்  எளிதில்  தங்களுக்கான  வாசிப்புப் புத்தகங்களை அடையாளங்கண்டு  வாசிக்கப் பழகினர்.
இது மாணவர்களின் வாசிப்புத்திறனை மேலோங்க செய்ததோடு, சுயக்கற்றலையும் உருவாக்கியதை எங்களால் உணர முடிந்தது. வாரத்தில் ஒரு நாள் இச்செயல்திட்டத்திற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளும்   மாணவர்களின் அடைவுநிலையின்படி,   அடுத்த நிலையங்களுக்கு அவர்களை உயர்த்துவதற்கும் பிரத்தியோக வகுப்பொன்றும்                     சிறப்பாக  
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்டும் வருகிறது. இதில் இக்குழந்தைகள் மிகவும் ஆர்வத்தோடு இயங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் மாணவர்கள் இதச்செயல்திட்டத்தில்   மொழிவிளையாட்டுகளில் ஈடுபடுவதைப் போலவே  
ஆர்வம் குன்றாமல்   இன்றளவிலும்  ஈடுபாடு  காட்டி  வருவதும்,  தேசிய மொழியில் கடந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை விட இவர்கள் சீக்கிரமே வாசிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதையும் எங்களால் இச்செயல் திட்டத்தின் மூலம் உணர முடிகிறது.
          தேசிய மொழியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எழுத்தறிமுகம் செய்யவும், அல்லது வாசிப்புத் திறனை மேலோங்கச் செய்யவும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை எளிமைபடுத்திக் கொள்ளவும் இத்திட்டம் எங்களுக்கு நன்கு உதவியது என்றே கூற வேண்டும்.இத்திட்டத்தை ஆசிரியர்கள் தங்களின் பள்ளியிலும் நடத்திப் பார்க்க விரும்பினால் என் மின் அஞ்சலுக்குத் தாராளமாகத்  தொடர்புக்கொள்ளலாம். நன்றி.

கணேசர் தமிழ்ப்பள்ளியின் விருதளிப்பு விழாவும். 'தமிழ்விழி' புத்தக வெளியீடும்...

Posted by Justin Jeevaprakash | | Posted On Wednesday, November 17, 2010 at 3:18 PM

கடந்த 14-11-2010ல் கணேசர் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு விருதளிப்பு விழா மிகவும் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக ஐயா திரு.கெங்கையன் அவர்களும் செர்டாங் மாவட்ட இந்து சங்க செயலாளர் திரு. தங்கவேலு
அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்த விருதளிப்பு விழா எவ்வருடமும் காணாத அளவுக்கு இவ்வருடம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்வருடம் மாணவர்கள் யூபிஎசார் தேர்வில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல்      கூலிம் மாவட்ட ரீதியில் நடைபெற்ற கலை, கலாச்சார விழாக்களிலும் சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது பல கொடை நெஞ்சங்களைப் பள்ளியின் பக்கம்
 ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வருடம் 6ஏ 1பி எடுத்த மாணவி
செல்வி புஷ்பா சங்கரன் சிறப்பு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து  இப்பள்ளியில்        5ஏ , 4ஏ,   3ஏ எடுத்த மாணவர்களும் சிறப்பு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.                மேலும்,
பள்ளி ஆசிரியர்களுக்கும்  சிறப்புத்
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும்  மலேசிய  இந்து  சங்க  சார்பில், செர்டாங்  மாவட்ட இந்து சங்க செயலாளர் திரு. தங்கவேலு அவர்கள் சிறப்பு செய்து சான்றிதழ் வழங்கினார். இதனைத்  தொடர்ந்து  பள்ளியின் தலைமையாசிரியைத் திருமதி.யௌவனராணி அவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகப் பாடுபடும்; பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நன்நெஞ்சங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு, நாம்தான் பாடுபட வேண்டும் எனக் கூறிக் கொண்டு, அனைவரின் ஆதரவையும் அடுத்தடுத்தாண்டுகளிலும் தேவை என்பதையும் தமது உரையில் தெரிவித்துக் கொண்டார்.
             அதுமட்டுமின்றி, அன்றே பள்ளியில் 'தமிழ்விழி' எனும் மாணவர் படைப்பிலக்கிய இதழை வெளியீடு செய்தோம். இந்நிகழ்வு விருதளிப்பு விழாவில் ஓர் அங்கமாக நடந்தேறியது.
மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கவும், நாளைய எழுத்தாளர்களாக அவர்கள் வளர்ந்து வரவும், இது அடித்தளமாக அமைந்தது. மேலும் இப்புத்தகத்தைப் பல நன்நெஞ்சங்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக நன்கொடையாக கொடுத்துப் பெற்றுக்   கொண்டதும், மாணவர்களின் படைப்பிற்கு ஓர் அந்தஸ்த்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இவ்விதழ் வெளியீட்டிற்கு என்னோடு சேர்ந்து  ஆசிரியர் திரு.வடிவேல் அவர்களும், ஆசிரியர் திரு. போகீர்த்தனன் அவர்களும், ஆசிரியர் திரு. சரவணன் அவர்களும், ஆசிரியைக் குமாரி. அன்னபூரணி அவர்களும் பணியாற்றினர் என்பதோடு, அவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.
.


சகதி…

Posted by Justin Jeevaprakash | | Posted On Monday, September 27, 2010 at 8:55 AM

.
அசைவோடு

அசைந்தாடி…

மென்காற்றோடு உறவாடி..

பிறந்து பிரிந்ததோ..

நேர்மின்மமுமாய்…

எதிர்மின்மமுமாய்…



இயற்கைக்கு

இயல் கொடுத்து

அசைவுக்கு

இசைக்கொடுத்து

சேர்ந்ததோ..

அணு ரூபமாய்..



தடம் தேட அணுரூபம்,

காற்றோடும்...

தீயோடும்…

நீரோடும்…

நிலத்தோடும்…

வானோடும்..

பரிணாமித்ததோ

பஞ்ச பூதமாய்…



இதையறிந்தும்

அறியாததுமாய்..

அறியாததை

அறிந்ததுமாய்…

மானிடன் மாயை

எனும் வலைக்குள்

பின்னியதும் ஏணோ…

(கடந்த அநங்கம் இதழில்
வெளியிடப்பட்ட என் கவிதை)
.

ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு...

Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, September 10, 2010 at 12:37 PM

வணக்கம். நான் இலக்கியப் பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் என்னை அதிக சிந்த்திக்கத் தூண்டிய பதிப்புகளில் ஐயா ஜெயமோகன் அவரின் படைப்புக்களும்    ஒன்று . அவ்வகையில் என்னை நான் ஆழப்படுத்தி கொண்டதற்கு ஐயா ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் ஆரம்ப காலக்கட்டத்திலிருந்தே  எனக்குப் பெரும் பங்காற்றின. ஆனால் அன்னாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்பதை நான் சிரிதும் எதிர்பார்க்கவில்லை.   ஐயாவின்  முதல் நாள் வருகையின் போது துவான்க்கு        பைனூன் ஆசிரியர் பயிற்சி கழகத்தில்  தமிழ்த்துரையின் ஏற்பாட்டில் தமிழ் இலக்கியக்   கருத்தரங்கம்  ஏற்பாடு   செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சந்தித்தேன் .  ஐயா ஜெயமோகன் நிகழ்வில் பேசுகையில் இலக்கியத்தில் கற்பிக்கப்படும் அறங்கள் குறித்து மேலும் தெளிவாக முன்வைக்க கதைகளின் வழி விளக்கினார்.  அறங்களை மட்டும் போதிப்பது ஒரு நல்ல இலக்கியமாகக் கருத முடியாது. அது வெறும் திருப்தி படுத்தும் அளவுக்குத்தான் அமைந்திருக்கும் எனவும், இலக்கியம் என்பது அனைத்தையும் உள்வாங்கப்பட்ட ஒன்று எனவும் அந்த  அறத்தின் வழி உருவாகும் வெளிப்பாடுகளை ஒரு கலையாகத் ஒரு காலச்சூழலில் தருவதில் இலக்கியத்திற்கு முக்கியமான இடம் உண்டு எனவும் குறிப்பிட்டார்.
         தொடர்ந்து, ஐயா அவர்களை
நேற்று நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நேற்று காலையில் எனக்கு ஏற்ப்பட்டது.இச்சந்திப்பு               கூலிம்               தியான
ஆசிரமத்தில்              நடைபெற்றது. இதில்  நான், நண்பர் கே.பாலமுருகன், எழுத்தாளர் கோ.புண்ணியவான், விரிவுரையாளர் தமிழ் மாறன் ஆகியோரும் கலந்து கொண்டோம். எங்களோடு  சுவாமி பிரமானந்தா சரஸ்வதி அவர்களும்     கலந்து கொண்டார்.  ஐயா ஜெயமோகன் அவர்கள் பல விடயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்குள் அடங்கியிருந்த பல கேள்வி முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டன என்றே கூறவேண்டும். ஒரு நல்ல இலக்கிய படைப்பளியாக உருவெடுக்க ஒருவர் முதலில்  ஒருநல்ல  படிப்பாளியாக இருக்க வேண்டும் என்றார். மேலும் தற்போது தமிழில் நிறையா உலக இலக்கியங்கள் மொழிப்  பெயர்க்கப்பட்டிருப்பதாகவும்         அதனை தவறாது வாசிக்கவும் வேண்டும் எனவும் ஐயா அவர்கள் குறிப்பிட்டார். மேலும் ஆரம்ப நிலை எழுத்தளர்கள் நிறைய வாசிப்பதோடு மட்டுமின்றி மொழி வளம் பெறவும் நிறைய எழுத வேண்டும் என்பது அவருடைய கருத்தாக அமைந்தது.

பல எழுத்தாளர்களைப் பற்றியும் பல எழுத்துப் படிவங்களைப் பற்றியும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, ஆன்மீக விடயங்களையும் தன் வாழ்க்கை அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டது எனக்கு ஒரு உந்துதலாக அமைந்தது. நேற்றைய பொழுது என்னை நானே மறந்து இலக்கிய உலகத்தின் சுவையை சுவைத்ததிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே கூற வேண்டும். எங்களின் உரையாடல் ஏறக்குறைய 4   மணி நேரம் இழுத்ததா என்பது இன்னும் எனக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.